Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Andhra Chicken curry

 

ஆந்திரா சிக்கன் கறி
திவ்யா அர்ஜுன்
தேவையானவை:
1. கோழிக்கறி அரைக்கிலோ
2. பெரிய வெங்காயம் - 2
3. தக்காளி – 3
4. பச்சை மிளகாய் - 2
5. இஞ்சி ப10ண்டு பேஸ்ட் - 2 கரண்டி
6. மிளகாய்த்தூள் - 2 கரண்டி
7. மிளகுத்தூள் - அரைக் கரண்டி
8. மல்லித்தூள் - 1 கரண்டி
9. பட்டை சிறதளவு
10. ஏலக்காய் -2
11. கிராம்பு - 2
12. கரம் மசாலா பொடி சிறிதளவு
13. கறிவேப்பிலை
14. மல்லித்தளை
15. உப்பு தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிளகாய்த்தூள் இஞ்சி ப10ண்டு பேஸ்ட் சிறிதளவு உப்புத்தூள் மூன்றையும் சேர்த்து கழுவி சுத்தப்படுத்திய கோழிக்கறியுடன் கலந்து வைத்துக் கொள்ளவும். 5 நிமிடம் கழித்து அடுப்பில் ஒரு சட்டியை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சூடானவுடன் அதில் கலந்து வைத்துள்ள கோழிக்கறியை போட்டு 10 நிமிடம் லேசான தணலில் வேக வைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு சட்டியை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு சூடேற்றவும். அறுத்து வைத்துள்ள வெங்காயத்தை போட்டு கிளறிவிடவும். பின்னர் பட்டை ஏலக்காய் கிராம்பு ஆகியவற்றை அதில் போட்டு கிளறிவிடவும். அடுத்து தக்காளியை போடவும். பின்னர் மிளகாய்த் தூள் மிளகுத்தூள் மல்லித்தூள் கரம் மசாலா தூள் ஆகியவற்றை போட்டு ஒரு நிமிடத்திற்கு நன்றாக கிளறி விடவும்.
பின்னர் அதில் தனியே வேக வைத்துள்ள கோழிக்கறியை அப்படியே (தண்ணீருடன); சட்டியில் இட்டு ருசிக்கேற்ப உப்பைச் சேர்த்து மிதமான தணலில் பத்து நிமிடம் வேக வைத்து இறக்கவும். அதன் மேல் கறிவேப்பலை மல்லித்தளையை பொடியாக நறுக்கி தூவி விடவும். இப்போது ஆந்திர சிக்கன் கறி தயார். ஒரு முறை செய்து பாருங்கள். அதன் சுவை மீண்டும் மீண்டும் சுவைக்கத் தோன்றும்.

ஆந்திரா சிக்கன் கறி

திவ்யா அர்ஜுன்

 

தேவையானவை:

 

1. கோழிக்கறி அரைக்கிலோ

2. பெரிய வெங்காயம் - 2

3. தக்காளி – 3

4. பச்சை மிளகாய் - 2

5. இஞ்சி ப10ண்டு பேஸ்ட் - 2 கரண்டி

6. மிளகாய்த்தூள் - 2 கரண்டி

7. மிளகுத்தூள் - அரைக் கரண்டி

8. மல்லித்தூள் - 1 கரண்டி

9. பட்டை சிறதளவு

10. ஏலக்காய் -2

11. கிராம்பு - 2

12. கரம் மசாலா பொடி சிறிதளவு

13. கறிவேப்பிலை

14. மல்லித்தளை

15. உப்பு தேவையான அளவு

 

 

செய்முறை:

 

முதலில் மிளகாய்த்தூள் இஞ்சி ப10ண்டு பேஸ்ட் சிறிதளவு உப்புத்தூள் மூன்றையும் சேர்த்து கழுவி சுத்தப்படுத்திய கோழிக்கறியுடன் கலந்து வைத்துக் கொள்ளவும். 5 நிமிடம் கழித்து அடுப்பில் ஒரு சட்டியை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சூடானவுடன் அதில் கலந்து வைத்துள்ள கோழிக்கறியை போட்டு 10 நிமிடம் லேசான தணலில் வேக வைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.


பின்னர் அடுப்பில் ஒரு சட்டியை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு சூடேற்றவும். அறுத்து வைத்துள்ள வெங்காயத்தை போட்டு கிளறிவிடவும். பின்னர் பட்டை ஏலக்காய் கிராம்பு ஆகியவற்றை அதில் போட்டு கிளறிவிடவும். அடுத்து தக்காளியை போடவும். பின்னர் மிளகாய்த் தூள் மிளகுத்தூள் மல்லித்தூள் கரம் மசாலா தூள் ஆகியவற்றை போட்டு ஒரு நிமிடத்திற்கு நன்றாக கிளறி விடவும்.


பின்னர் அதில் தனியே வேக வைத்துள்ள கோழிக்கறியை அப்படியே (தண்ணீருடன); சட்டியில் இட்டு ருசிக்கேற்ப உப்பைச் சேர்த்து மிதமான தணலில் பத்து நிமிடம் வேக வைத்து இறக்கவும். அதன் மேல் கறிவேப்பலை மல்லித்தளையை பொடியாக நறுக்கி தூவி விடவும். இப்போது ஆந்திர சிக்கன் கறி தயார். ஒரு முறை செய்து பாருங்கள். அதன் சுவை மீண்டும் மீண்டும் சுவைக்கத் தோன்றும்.

 

User Comments
Bhushitha
Nalla suvai..
Information
Name
Comments
 
Verification Code
1 + 6 =