Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni -kaLatni 01-01-2019

ஸெளராஷ்ட்ர ஸாஹித்ய விருது!

மதுரை கீதா நடனகோபால நாயகி மந்திரில் ஸ்ரீமந் நடனகோபால நாயகி ஸ்வாமிகளின் 176வது ஜெயந்தி விழா வருகின்ற 22-12-2018 முதல் 28-12-2018 முடிய இசை இலக்கிய கலை விழாவாக சிறப்பாக நடைபெற்றது. முத்து விஜயன் - சரண்யா குழுவினரின் நாதஸ்வர இசைவிழாவுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகியது. மதுரை மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி விழாவினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 4ஆம் நாள் நிகழ்ச்சியில் டாக்டர்.குப்புசாமி-அவந்திகாபாய் ஆகியோரின் பெற்றோர்கள் நினைவாக ஸ்ரீநாயகியார் ஸெளராஷ்ட்ரீ ஸாஹித்ய விருது வழங்கும் விழா நடைபெற்றது. 
இவ்விழாவின்போது பி3ந்து3லா கெ2நி எழுதிய ஸெளராஷ்ட்ர டைம் ஆசிரியர் சூர்யா ஞானேஸ்வர்ää பாண்டவுந் கெ2தொ எழுதிய கசின் ஆனந்தம்ää ஆஸ்தொ எழுதிய திருபுவனம் எம்.எஸ்.ரமணி மற்றும் அஜ்ஜி ஸங்கெ3 கெ2நி கெ2தாந் எழுதிய கொண்டா.செந்தில்குமார் ஆகியோர் விருது பெற்றனர். ஸாஹித்ய அகாடாமியினர் விருது வழங்கும் நடைமுறையைப் பின்பற்றி இவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
நிகழ்ச்சியின் இறுதி நாளன்று சிங்கப்பூரில் இருக்கும் வயலின் வித்வான் குரு-இந்தியன் பைன் ஆர்ட்ஸ் நெல்லை ரவீந்திரன்ää திருச்சி ஆல் இண்டியா ரேடியோ நிலைய மிருதங்க வித்வான் சேலம் கே. சீனிவாசன் ஆகியோர்க்கு நாயகி மந்திர் சார்பில் விழாக்குழுவினரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மதுரை கீதா நடனகோபால நாயகி மந்திரில் ஸ்ரீமந் நடனகோபால நாயகி ஸ்வாமிகளின் 176வது ஜெயந்தி விழா வருகின்ற 22-12-2018 முதல் 28-12-2018 முடிய இசை இலக்கிய கலை விழாவாக சிறப்பாக நடைபெற்றது. முத்து விஜயன் - சரண்யா குழுவினரின் நாதஸ்வர இசைவிழாவுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகியது. மதுரை மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி விழாவினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 4ஆம் நாள் நிகழ்ச்சியில் டாக்டர்.குப்புசாமி-அவந்திகாபாய் ஆகியோரின் பெற்றோர்கள் நினைவாக ஸ்ரீநாயகியார் ஸெளராஷ்ட்ரீ ஸாஹித்ய விருது வழங்கும் விழா நடைபெற்றது. 

இவ்விழாவின்போது பி3ந்து3லா கெ2நி எழுதிய ஸெளராஷ்ட்ர டைம் ஆசிரியர் சூர்யா ஞானேஸ்வர், பாண்டவுந் கெ2தொ எழுதிய கசின் ஆனந்தம், ஆஸ்தொ எழுதிய திருபுவனம் எம்.எஸ்.ரமணி மற்றும் அஜ்ஜி ஸங்கெ3 கெ2நி கெ2தாந் எழுதிய கொண்டா.செந்தில்குமார் ஆகியோர் விருது பெற்றனர். ஸாஹித்ய அகாடாமியினர் விருது வழங்கும் நடைமுறையைப் பின்பற்றி இவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

நிகழ்ச்சியின் இறுதி நாளன்று சிங்கப்பூரில் இருக்கும் வயலின் வித்வான் குரு-இந்தியன் பைன் ஆர்ட்ஸ் நெல்லை ரவீந்திரன், திருச்சி ஆல் இண்டியா ரேடியோ நிலைய மிருதங்க வித்வான் சேலம் கே. சீனிவாசன் ஆகியோர் நாயகி மந்திர் சார்பில் விழாக்குழுவினரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
1 + 5 =