Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
suyasinthanai.....ShrEyangam.....1-7

ஸ்ரேயங்க3ம்:


  Vol.5 1st July  2018 Issue: 21


சுயசிந்தனை தேவை!

ஸெளராஷ்ட்ர மத்ய சபை எங்கே செல்கிறது? சமீப காலமாக மத்ய சபை நடவடிக்கைகள் சமூகப் பத்திரிகைகளில் இடம்பெறுவது இல்லை. காரணம் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் குரூப் என்று ஏகமாக அவர்களே அவர்களுடைய செய்திகளை வெளியிட்டுக் கொள்கிறார்கள். தலைவரை முகஸ்துதி செய்வதும் அவருடைய செல்வாக்கை உயர்த்தும் விதத்தில் கிழக்கிலிருந்து மேற்குவரை மாறி மாறிப் புகழ்வதுமாகவே காலம் தள்ளப்படுகிறது. போதாக்குறைக்கு சென்னை மற்றும் பெங்களுர் பத்திரிகைகள் மட்டும் தனக்காக செயல்பட்டால் போதும் என்ற நிலையில் தலைமை செயல்பட்டு வருவது அப்பட்டமாக தெரிகிறது.


ஆரம்பத்தில் தலைமை செயல்பட்டவிதம் தற்போது செயல்படும்விதம் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.. தலைவர் மதுரை வந்தால் கூட உள்ளுர் பத்திரிகைகளுக்குத் தெரியப் படுத்த வேண்டும் என்ற சராசரி தகவல் பரிமாற்றத்திற்கும் தயாராக இல்லை. மொழி இலக்கியம் போன்றவற்றில் நிர்வாகத்திற்கு முழு ஈடுபாடில்லை. சாகித்ய கர்த்தாக்களையும் மொழி ஆர்வலர்களையும் அங்கீகாரம் செய்யாமல் தேவையில்லாத முத்திரைக் குத்தி ஒதுக்கி வைப்பது எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பதை தலைவர் புரிந்து கொண்டு செயல்பட்டால் நிர்வாகத்திற்கு பெருமை சேர்க்கும். 


தன்னையும் தனது நிர்வாகத்தையும் எதிர்ப்பவர்களை ஒதுக்கி பார்ப்பதும் துதிபாடுவோர்க்கு குழு அமைத்து பதவிகளை வாரி வழங்கி கௌரவிப்பதும்தான் இன்றைய மத்ய சபையின் நிலை. இதிலிருந்து மாறுபட்டு அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு தலைவரிடம் மீண்டும் வளரவேண்டும். தன்னை எதிர்ப்பவர்கள் என்ற நிலையிலிருந்து விடுபடவேண்டும். கருத்து வேறுபாடு என்பதைதவிர யாரும் தனிப்பட்ட முறையில் எதிரிகள் அல்ல என்ற தன்மையில் சிந்தனையை வளர்த்துக் கொண்டால் அனைத்து தரப்பினரிடையேயும் நல்ல நட்பு வளரும். உங்கள் அருகிலிருந்து உங்களை துதிபாடுபவர்களை தவிர்த்து சுயசிந்தனையில் செயல்படத் தொடங்கினால் ஒரு நல்ல சக்திவாய்ந்த தலைவரை சமூகம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் காலம் விரைவில் வரும் என்று நம்புவோம்.

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 8 =