Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
ezhuchi naaL....Shreyangam

ஸ்ரேயங்க3ம்:


Vol.5 16th October  2017 Issue: 4


ஸெளராஷ்ட்ரர் எழுச்சி நாள் 

ஸெளராஷ்ட்ர சபை தேர்தல் என்றாலே அந்தந்த ஊர் மக்களுக்கு எழுச்சி நாள் என்றே சொல்லலாம். ஸெளராஷ்ட்ர மத்ய சபைக்கு தேர்தல் என்றால் ஒட்டு மொத்த சமூகத்திற்கே அன்றைய தினம் ஸெளராஷ்ட்ரர் எழுச்சி நாள் என்று சொல்வதில் மிகையேதுமில்லை. ஸெளராஷ்ட்ர மத்ய சபைக்கு உறுப்பினர் எண்ணிக்கை குறைவு என்றாலும் அதன் பெயருக்கு ஒரு தனி வலிமை உள்ளது என்பதை யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொண்டவர்கள் அதில் அங்கம் வகிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் சிலர் ஆக்கிரமிக்க வேண்டும் என்று நினைப்பதில்தான் தவறுக்கு இடமளிக்கிறது.

 

ஸெளராஷ்ட்ர மத்ய சபை ஏன் தொடங்கப்பட்டது? தென்னிந்தியாவில் இருக்கும் அத்தனை ஸெளராஷ்ட்ரர்களும் பரஸ்பர ஒற்றுமைக்கும் தொடர்புக்கும் அதாவது ஒன்றுப்பட்ட சமுதாயமாக காட்டவும் நம்மில் இப்படி ஓர் அமைப்பு அவசியமாகிறது என்பதை உணர்ந்த சுமார் 100 ஆண்டைக் கடந்த நம் சமூக முன்னோர்களால் எவ்வித சுயநலமின்றி தொடங்கப் பட்டதே ஸெளராஷ்ட்ர மத்ய சபை. சமுதாய ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் நமக்கு அரசாங்கத்தின் மூலமாக பாதுகாப்பு தேவை என்பதாலும் நம் குரலை அரசாங்கத்திற்கு எட்டச் செய்யவும் இந்த அமைப்பின் முக்கியப் பணியாகக் கொள்ளப்பட்டது.

 

பல மகாநாடுகள் நடத்தப்பட்டுள்ளது. பற்பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் பலன் சமூகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பழைய கதை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஸெளராஷ்ட்ர மத்ய சபையும் ஊர் சபையும் ஒன்று என்ற மனோபாவத்தில் பலர் உள்ளனர். மத்ய சபைக்கு ஏராளமானோர் உறுப்பினர்களாக சேர்ந்திருக்கிறார்கள் என்று தற்போது முகநூலில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனரா? இல்லை சேர்த்துள்ளனரா என்று தெரியவில்லை. இரண்டிற்கும் வேறுபாடு நிறைய உள்ளது. உறுப்பினர்கள் சேர்ந்திருந்தால் நல்லதோர் விழிப்புணர்வு என்றே கூறலாம். மாறாக சேர்த்திருந்தால் அணிகள் உருவாகும். செயல்பாட்டில் மனக்கசப்புகள் ஏற்படலாம். நிர்வாகத்தில் ஒத்துழைப்புகள் இல்லாமல் போகலாம். 

 

உண்மையான சேவாமனப்பான்மையிலும் அர்ப்பணிக்கும் தன்மையுடனும் வருவோரை வரவேற்கும் உன்னதமான கலாச்சாரத்தை நம்மில் வளர்த்துக் கொண்டாலே போதும். போட்டிகளும் மனக்கசப்புகளும் இல்லாத ஒன்றுப்பட்ட எண்ணங்களுடன் கூடிய நிர்வாகத்தைக் காணலாம். அதற்கு ஏற்கனவே உள்ள உறுப்பினர்களும் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தால்தான் முடியும். பொது வாழ்வில் சாதிக்க நினைப்பவர்களுக்கு நம்மால் முடிந்த ஒத்துழைப்பு தந்தாலே போதும். அவர்களால் நிச்சயமாக நம் சமூகத்திற்கு நல்லதோர் விடியல் கிடைக்கும்.

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 6 =