Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
puthu parimANam....Shreyangam

 

ஸ்ரேயங்க3ம்:
புதிய பரிமாணம்
ஸெளராஷ்ட்ர சமூகத்தில் தேர்தல் சளி பிடித்துவிட்டது. ஜனநாயக முறையில் நடந்தாலும் பதவியை தக்கவைத்துக் கொள்ள தப்பில்லாமல் தப்பு செய்யும் பிரமுகர்களால் தேர்தல் களம் நன்றாக களைக்கட்டுகிறது. யார் என்ன சொன்னாலும் எதுவும் எடுபடாது என்ற பாணியில் பழைய நிர்வாகமே பதவியை அப்படியே தக்கவைத்துக் கொண்ட மதுரை ஸெளராஷ்ட்ர சபையின் முதல் காட்சி. அதிமுகவைப்போல செயல்பட்டவர்கள் இரண்டாக பிரிந்து போட்டியிட்டு மறுபடியும் அவர்களில் ஒரு பிரிவினர் மீண்டும் பதவியில் அமர்ந்திருப்பது இன்னொரு காட்சி. இது கல்லூரியின் கதை. அடுத்தக் காட்சிக்கு சமூகம் தயாராகிக் கொண்டிருப்பது மத்ய சபையின் தேர்தல். 
இணைக்கப்பட்ட ஊர் சபைகள் பொது ஸ்தாபனங்கள் மத்ய சபையின் தேர்தலுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்பது நியதி. பல ஊர்களில் ஊர் சபையின் இயலாமையால் தேர்தல் நடைபெறாமல் போட்டியின்றி தேர்தலை எதிர்கொள்ளாமல் முடித்துக் கொண்டுள்ளனர். ஆரோக்கியமான போட்டியில் சேவை செய்ய முன்வருவோரை மனமுவந்து வரவேற்கும் பண்பாட்டினை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும். அந்த நல்ல பண்பு குறைந்து காணப்படுவதே முறையற்ற செயல்பாடு வளர்வதற்கு அஸ்திவாரமாக அமைகிறது. 
ஸெளராஷ்ட்ர மத்ய சபைக்கென ஒரு தனி பாரம்பரியம் உண்டு. அனைத்து ஊர்களிலிலிருந்து பிரதிநிதிகள் நிர்வாக சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து தலைமை பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதுண்டு. ஒருமுறை மதுரைக்கும் மற்றொரு முறை மதுரை அல்லாத பிற ஊருக்கும் என்று வாய்வழியாக ஒரு விதிமுறை உண்டு. அதன்படியே இதுநாள் வரை நடந்துள்ளது. இது சமூக ஆரோக்கியம் கருதி கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்திய ஏற்பாடு. இனியும் தொடர்ந்து இதே ரீதியில் நடக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
திண்டுக்கல் வழியாக மதுரைக்கு வந்த தலைமை இப்போது தஞ்சைக்கு செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்விதக் குழப்பமின்றி தேர்தல் முடிவடைந்து சமூகத்திற்கு நன்மை கிடைக்கப்படவேண்டும். வருகின்ற டிசம்பரில் இந்த காட்சி நிறைவு பெறுகிறது. இடையில் மதுரையில் வேறுசில காட்சிகளும் அரங்கேறி நிறைவு பெற்றுள்ளது. புத்தாண்டில் அனைத்தும் புதிய பரிமாணத்துடன் விளங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஸ்ரேயங்க3ம்:


Vol.5 1st October  2017 Issue: 3


புதிய பரிமாணம்

ஸெளராஷ்ட்ர சமூகத்தில் தேர்தல் சளி பிடித்துவிட்டது. ஜனநாயக முறையில் நடந்தாலும் பதவியை தக்கவைத்துக் கொள்ள தப்பில்லாமல் தப்பு செய்யும் பிரமுகர்களால் தேர்தல் களம் நன்றாக களைக்கட்டுகிறது. யார் என்ன சொன்னாலும் எதுவும் எடுபடாது என்ற பாணியில் பழைய நிர்வாகமே பதவியை அப்படியே தக்கவைத்துக் கொண்ட மதுரை ஸெளராஷ்ட்ர சபையின் முதல் காட்சி. அதிமுகவைப்போல செயல்பட்டவர்கள் இரண்டாக பிரிந்து போட்டியிட்டு மறுபடியும் அவர்களில் ஒரு பிரிவினர் மீண்டும் பதவியில் அமர்ந்திருப்பது இன்னொரு காட்சி. இது கல்லூரியின் கதை. அடுத்தக் காட்சிக்கு சமூகம் தயாராகிக் கொண்டிருப்பது மத்ய சபையின் தேர்தல். 

 

இணைக்கப்பட்ட ஊர் சபைகள் பொது ஸ்தாபனங்கள் மத்ய சபையின் தேர்தலுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்பது நியதி. பல ஊர்களில் ஊர் சபையின் இயலாமையால் தேர்தல் நடைபெறாமல் போட்டியின்றி தேர்தலை எதிர்கொள்ளாமல் முடித்துக் கொண்டுள்ளனர். ஆரோக்கியமான போட்டியில் சேவை செய்ய முன்வருவோரை மனமுவந்து வரவேற்கும் பண்பாட்டினை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும். அந்த நல்ல பண்பு குறைந்து காணப்படுவதே முறையற்ற செயல்பாடு வளர்வதற்கு அஸ்திவாரமாக அமைகிறது. 

 

ஸெளராஷ்ட்ர மத்ய சபைக்கென ஒரு தனி பாரம்பரியம் உண்டு. அனைத்து ஊர்களிலிலிருந்து பிரதிநிதிகள் நிர்வாக சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து தலைமை பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதுண்டு. ஒருமுறை மதுரைக்கும் மற்றொரு முறை மதுரை அல்லாத பிற ஊருக்கும் என்று வாய்வழியாக ஒரு விதிமுறை உண்டு. அதன்படியே இதுநாள் வரை நடந்துள்ளது. இது சமூக ஆரோக்கியம் கருதி கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்திய ஏற்பாடு. இனியும் தொடர்ந்து இதே ரீதியில் நடக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

 

திண்டுக்கல் வழியாக மதுரைக்கு வந்த தலைமை இப்போது தஞ்சைக்கு செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்விதக் குழப்பமின்றி தேர்தல் முடிவடைந்து சமூகத்திற்கு நன்மை கிடைக்கப்படவேண்டும். வருகின்ற டிசம்பரில் இந்த காட்சி நிறைவு பெறுகிறது. இடையில் மதுரையில் வேறுசில காட்சிகளும் அரங்கேறி நிறைவு பெற்றுள்ளது. புத்தாண்டில் அனைத்தும் புதிய பரிமாணத்துடன் விளங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 9 =