Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni-kaLatni 22-08

21-8-17 அன்று ஸெளராஷ்ட்ர மத்ய சபையின் கடைசி நிர்வாகக் குழுக்கூட்டம் குடந்தை ராயா ஹோட்டலிலுள்ள கான்பரன்ஸ் ஹாலில் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. குடந்தை ராயா கோவிந்தராஜன்-உமாமகேஸ்வரி தம்பதியரின் சஷ்டியப்த பூர்த்தி விழாவில் கலந்து கொண்டு மத்ய சபை சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

ராயா கோவிந்தராஜன் அவர்கள் செய்துள்ள பணியினைப் பாராட்டியும் அவர் தொழிலாளர்கள் மீது கொண்டுள்ள அன்பு கருணை பற்றியும் ஆன்மீகப் பணியில் சிறப்பாக பணியாற்றி வருவது பற்றியும் பெருமையாக எடுத்துரைத்து எஸ்.ஆர்.கோகுல், எஸ்.ஆர்.தேவதாஸ், முன்னாள் மத்ய சபைத்தலைவர் துளசிராம், சாந்தாராம். சுப்பரமணியன்ää ராமலிங்கம் மற்றும் மத்யசபை பொதுக்காரியதரிசி ராமசுப்பிரமணியன் புதுச்சேரி ஸெளராஷ்ட்ர சபைத்தலைவர் ரவீந்திரன், குசோ ஜெயபால், கே.வி.பதி, உமாபதி, சென்னை ஸ்ரீராம்சேகர்ää பொருளாளர் மூர்த்தி, துணைச்செயலாளர் சாந்தாராம், தஞ்சை சுரேந்திரன்பாபு உள்பட பலர் பேசினார்கள். 

இறுதியாக இந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தேர்தலுக்கான தேதியை முறைப்படி அறிவித்தார். அதன்படி உறுப்பினர் சேர்க்கையை 2017 அக்டோபர் 25ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிர்வாகக் குழு

தேர்தல் 2017 டிசம்பர் 10ஆம் நாளன்றும் தலைவர் தேர்தல் டிசம்பர் 25ஆம் தேதியன்றும் நடைபெறும் என்றும் தெரிவித்தார். தேர்தல் அதிகாரியாக மதுரை வழக்கறிஞர்கள் சுதர்சன்பாபு மற்றும் ஜனார்தனன் ஆகியோர் நியமிக்கப்படுவதாக அறிவித்தார். இம்முறை தஞ்சை எம்.எஸ்.ராமலிங்கம் தலைவராவதை வரவேற்பதாக அனைத்து தரப்பிலும் கூறப்பட்டது. தன்னுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றி ஒத்துழைப்பு நல்கிய பொதுக்காரியதரிசி ராமசுப்பிரமணியனை பாராட்டி தலைவர் ஈஸ்வரமூர்த்தி பொன்னாடை அணிவித்து நன்றியை தெரிவித்துக் கொண்டார்.


 

மடீட்சியா-சக்தி மசாலா மகளிர் தொழில் முனைவோருக்கான விருது 2016க்கு மதுரை ஸெளராஷ்ட்ர சமூக நிறுவனமான கண்ணன் பிராண்ட் கிரி ஃபுட் நிறுவனத்திற்கு இரண்டாவது பரிசு கிடைத்துள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா மதுரை மடீட்சியா அரங்கில் சென்ற 17-08-2017 அன்று மாலை நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஈரோடு ஏஞ்சல் ஸ்டார்ச் & ஃபுட் பிரைவட் லிட். நிறுவனத்தின் நிர்வாக இயக்குர் வி.பி.எஸ்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதினை வழங்கினார். கண்ணன் பிராண்ட் கிரி ஃபுட் நிறுவனத்தின் சார்பில் அதன் உரிமையாளர் ஹேமமாலினி மற்றும் அவரது கணவர் இணைந்து விருதினைப் பெற்றுக் கொண்டனர்.



User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 9 =