Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
thurithap....sHrEyangam

 

ஸ்ரேயங்க3ம்:
பணியைத் துரிதப்படுத்துங்கள்!
ஸெளராஷ்ட்ர மத்ய வரலாற்றில் ஒரு புதுமையான முயற்சியை இந்த நிர்வாகம் மேற்கொண்டு வருவதைக் கண்டிப்பாக வரவேற்க வேண்டும். சரித்திரம் பேசும்படி ஏதாவது செய்யத் துடிக்கும் தலைவர் ஈஸ்வரமூர்த்தியின் முயற்சிகளை கரம்கோர்த்து ஈடுபடுத்திக் கொண்டு உழைக்கும் நிர்வாகக் குழுவினரும் பொதுச் செயலாளரும் பாராட்டுக்குரியவர்கள். அப்படி என்ன தான் செய்து விட்டார்கள்? 
ஒரு அரசன் தனது பணியை சிறப்பாக செய்துள்ளான் என்பதற்கு அவன் பொதுபயன்பாட்டிற்கு செய்தவைகளே சான்றாக உள்ளன. கல்விச்சாலைகள் அமைப்பதும் சத்திரங்கள் கட்டுவதும் சிறந்த பணிகளாக இன்றுவரை சரித்திரம் அவர்களைப் புகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த மரபினை பின்பற்றி ஸெளராஷ்ட்ர மத்ய சபை ஒரு மைல்கல்லாக தனது சேவையை சமூகத்தின் முன் வைக்கிறது. குடந்தையில் ஒரு பெரிய இடம் வாங்கி கோடியில் மதிப்பீடு தயாரித்து பல அறைகளுடன் கூடிய தங்கும் விடுதியைக் கட்டும் பணியில் ஆர்வமுடன் இறங்கியுள்ளது. இதற்கு குடந்தை தர்மசீலர் ராயா குழுமத்தின் தலைவர் கோவிந்தராஜன் கைகோர்த்து உற்சாகப்படுத்தியுள்ளார். 
இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இடம் தேர்வாகியுள்ளதாக தகவல்கள் முகநூலில் பதிவாகியுள்ளது. இந்த தங்கும் விடுதி கட்டப்பட்டுவிட்டால் சமூக மக்கள் பயன்பாட்டிற்கு மிகக் குறைந்த வாடகையில் அனைத்து வசதிகளுடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் மத்ய சபைக்கு நிரந்தர வருவாய் கிடைப்பதுடன் இந்த நிர்வாக சபைக்கு நல்லதோர் பெயரும் புகழும் கிடைக்கும். 
இவ்விஷயத்தில் மத்ய சபைத்தலைவர் தனது நடவடிக்கையை இன்னும் துரிதப் படுத்தினால் நல்லது.

ஸ்ரேயங்க3ம்:


 

Vol.4 1st May 2017 Issue: 17


 

பணியைத் துரிதப்படுத்துங்கள்!

 

ஸெளராஷ்ட்ர மத்ய வரலாற்றில் ஒரு புதுமையான முயற்சியை இந்த நிர்வாகம் மேற்கொண்டு வருவதைக் கண்டிப்பாக வரவேற்க வேண்டும். சரித்திரம் பேசும்படி ஏதாவது செய்யத் துடிக்கும் தலைவர் ஈஸ்வரமூர்த்தியின் முயற்சிகளை கரம்கோர்த்து ஈடுபடுத்திக் கொண்டு உழைக்கும் நிர்வாகக் குழுவினரும் பொதுச் செயலாளரும் பாராட்டுக்குரியவர்கள். அப்படி என்ன தான் செய்து விட்டார்கள்? 

 

ஒரு அரசன் தனது பணியை சிறப்பாக செய்துள்ளான் என்பதற்கு அவன் பொதுபயன்பாட்டிற்கு செய்தவைகளே சான்றாக உள்ளன. கல்விச்சாலைகள் அமைப்பதும் சத்திரங்கள் கட்டுவதும் சிறந்த பணிகளாக இன்றுவரை சரித்திரம் அவர்களைப் புகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த மரபினை பின்பற்றி ஸெளராஷ்ட்ர மத்ய சபை ஒரு மைல்கல்லாக தனது சேவையை சமூகத்தின் முன் வைக்கிறது. குடந்தையில் ஒரு பெரிய இடம் வாங்கி கோடியில் மதிப்பீடு தயாரித்து பல அறைகளுடன் கூடிய தங்கும் விடுதியைக் கட்டும் பணியில் ஆர்வமுடன் இறங்கியுள்ளது. இதற்கு குடந்தை தர்மசீலர் ராயா குழுமத்தின் தலைவர் கோவிந்தராஜன் கைகோர்த்து உற்சாகப்படுத்தியுள்ளார். 

 

இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இடம் தேர்வாகியுள்ளதாக தகவல்கள் முகநூலில் பதிவாகியுள்ளது. இந்த தங்கும் விடுதி கட்டப்பட்டுவிட்டால் சமூக மக்கள் பயன்பாட்டிற்கு மிகக் குறைந்த வாடகையில் அனைத்து வசதிகளுடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் மத்ய சபைக்கு நிரந்தர வருவாய் கிடைப்பதுடன் இந்த நிர்வாக சபைக்கு நல்லதோர் பெயரும் புகழும் கிடைக்கும். 

 

இவ்விஷயத்தில் மத்ய சபைத்தலைவர் தனது நடவடிக்கையை இன்னும் துரிதப் படுத்தினால் நல்லது.

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 5 =