Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni-kaLatni: 16-9

இராசிபுரம்   ஸெளராஷ்ட்ர   கலாச்சார   அறக்கட்டளையின்  22-ஆம் ஆண்டு விழா சென்ற 10-09-2016 அன்று மாலை 6.00 மணிக்கு இராசிபுரம் ஸெளராஷ்ட்ர விப்ரகுல சமூக பஜனை மடத்தில் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. அறக்கட்டளை துணைச் செயலாளர் சௌந்தர்ராஜன் வரவேற்புரையாற்றினார். கவிஞர். அனந்தராமன் இறைவணக்கம் பாடினார். 

சௌராஷ்ட்ர விப்ரகுல சபையின் தலைவர் ரெங்கநாயகலு, அறக்கட்டளையின் செயலாளர் மூர்த்தி, துணைத்தலைவர் சுகுமார், மாதர்சங்க தலைவி தேவகி, இராஜேஸ்வரி, செயலாளர் ஜெயப்பிரகாஷ், அறக்கட்டளை பொருளாளர் சீனிவாசன், துணைத்தலைவர் ஸெளராஷ்ட்ர பூஷண் இராசிபுரம் அனந்தராமன், அரிகேசவன், ருக்குமாங்கதன்,   ரவீந்திரன், மோகன், மாதவன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

இவ்விழாவில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்ப்pல் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பாக தேர்ச்சிப் பெற்ற மாணவ-மாணவியர்க்கு ஊக்கப்பரிசும் விருதும் வழங்கப்பட்டது. 

ஸெளராஷ்ட்ர சமூகத்தில் மொழிக்காக சேவை செய்துவருவோர்களை அழைத்து சிறப்பு கௌரவம் செய்துவரும் இந்த அமைப்பினர் இந்த ஆண்டு ஸெளராஷ்ட்ர டைம் இ-பத்திரிகை ஆசிரியர் எஸ்.டி.ஞானேஸ்வரன் அவர்களுக்கு மொழிக்காக சிறப்பாக பணி செய்துகொண்டிருப்பதைப் பாராட்டி சிறப்பு செய்யும் விதத்தில் சமூக சேவா ரத்னா என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். பாராட்டுக்கு நன்றி கூறிய ஞானேஸ்வரன் தனது ஏற்புரையில் தான் கடந்து வந்த பாதையை நினைவுக்கூர்ந்தார். ஸெளராஷ்ட்ர மக்களை ஒருங்கிணைக்கும் மகாசக்தி இலக்கியங்களும் அதனைச் சார்ந்த பத்திரிகையும்தான் என்றால் அது மிகையாகாது. ஓவ்வொருவரும் ஸெளராஷ்ட்ர மொழியினை பேசுவதோடு நில்லாமல் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டு மொழியை காக்கவும் சமூக ஒற்றுமையை நிலைநிறுத்தவும் பாடுபடவேண்டும். ஸெளராஷ்ட்ர மொழி ஒரு ஜாதியல்ல. அது ஒரு இனம் என்பதை வலியுறுத்தியும் பேசினார். 

ஆதின்.மாதவன் நன்றி கூறினார். இரவு விருந்துடன் விழா நிறைவுற்றது.


ஸெளராஷ்ட்ர மத்ய சபையின் ஐந்தாவது செயற்குழுக்கூட்டம் வருகின்ற 02-10-2016 அன்று புதுச்சேரி, லாஸ்பேட், பாக்கமுடையான் பட்டு, பார்வதி கல்யாண மண்டபத்தில் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது வருகை புரிந்து சிறப்பிக்குமாறு பொதுச்செயலாளர் ராமசுப்பிரமணியன் வேண்டுகிறார்.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
1 + 8 =