Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
nallathOr....shrEyangam

ஸ்ரேயங்க3ம்:


Vol.3 1st August  2016 Issue: 23
நல்லதோர் தூண்டுகோல்

ஸெளராஷ்ட்ர சமூகத்தில் பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள் இலக்கிய கர்த்தாக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சமூக நலன்கருதி சேவைகளை செய்துவரும் பிரமுகர்களை விருதுகள் வழங்கியும் பாராட்டி கௌரவிக்கும் நல்ல பழக்கம் இன்று சமூக ஸ்தாபனங்களிடையே உருவாகிக் கொண்டிருக்கிறது. 

புதுவை சௌராஷ்ட்ர சபை ஆண்டுதோறும் தங்கள் ஆண்டுவிழாவின்போது சமூகப் பத்திரிகையாளர்களை அழைத்து கௌரவிக்கும் பண்பினைத் தொடர்ந்து சேலம் சௌராஷ்ட்ர சமூக சேவா சங்கம் சேலம் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களை பல ஆண்டுகளாக தொடர்ந்து பாராட்டி கல்வி உதவித்தொகைகள் வழங்கும் விழாவினை நடத்தி வருகிறார்கள். அவ்விழாவில் சமூகப் பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள் சாகித்ய கர்த்தாக்கள் பதிப்பாளர்கள் என்று அனைவரையும் அழைத்து ஸெளராஷ்ட்ர இலக்கியப் புத்தகக் கண்காட்சியையும் நடத்தி பங்குகொண்ட அனைவருக்கும் பாராட்டி கௌரவிக்கும் சிறந்த பழக்கத்தினை சென்ற ஆண்டு முதல் தொடங்கியுள்ளார்கள். தொடர்ந்து இந்த ஆண்டும் நடத்துவது குறிப்பிடத்தக்கது. 
அதே போன்று பி.வி.கே. குரூப் வழங்கும் ஸெளராஷ்ட்ர சாதனையாளர்கள் விருது, ஸெளராஷ்ட்ர நாடக தளபதி ஆர்.எம்.வி. சாரி விருது, சென்னை ஸெளராஷ்ட்ர கல்சுரல் அகாடமியினர் மற்றும் மதுரை ஸெளராஷ்ட்ர சமூக நலப்பேரவை போன்றோரால் நடத்தப்படும் விழாக்களால் முடங்கிக் கிடக்கும் திறமைசாலிகள் புத்துணர்வு பெற்று வருகிறார்கள் என்றால் அது மிகையாகாது.

சமீபக்காலமாக ஸெளராஷ்ட்ர மொழி, எழுத்து, இலக்கியம், பத்திரிகை, இயல், இசை, நாடகம், சினிமா என்று பலகலைகளிலும் சிறந்த சமூகப் பிரமுகர்கள் மற்றும் அரசியல் போன்ற பல துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது நல்ல உதாரணம். இதனைத் தொடர்ந்து அனைத்து ஊர் ஸெளராஷ்ட்ர சமூக ஸ்தாபனங்கள் சபைகள் சமூகத்தின் திறமைசாலிகளை தேடிப்பிடித்து பாராட்டி கௌரவிக்கும் சிறந்த பண்பாட்டினை வளர்த்துக் கொள்ள முன்வர வேண்டும். 

சமூகத்தின் எங்கோ ஒருபுறம் இருந்துகொண்டு தங்களால் ஆன சேவைகளை செய்து வருபவர்களை ஒருங்கே திரட்டி அவர்கள் செய்துவரும் பணிகளை சபையில் சொல்லி விருதுகள் வழங்கி கௌரவிக்கும் இந்த பண்பாடு சமூகத்தில் வளரவேண்டும். இதனால் சமூகப் பணியாற்றும் பிரமுகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் தங்கள் பணிக்கும் சமூக அங்கீகாரம் கிடைத்தது குறித்து மகிழ்வுடன் இன்னும் சிறப்பாக பணியாற்ற நல்லதோர் தூண்டுகோலாக அமையும் என்பதே வெளிப்படையான உண்மை.  

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
1 + 7 =