Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
mEndum...Shreyangam

ஸ்ரேயங்க3ம்:


     Vol.3 19th May 2016 Issue: 18


 

மீண்டும் முதல்வராகிறார் ஜெயலலிதா!

 

தேர்தல் முடிந்து வாக்குகளின் எண்ணிக்கையும் முடிந்தது. அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராகிறார். ஆளுகின்ற கட்சிக்கு மாற்று வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோஷம் ஒரு புறம் இருந்தாலும் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது என்பது வரலாறு படைத்த சிறப்பாகியுள்ளது.

 

இந்த மகத்தான வெற்றிக்குக் காரணம் என்ன என்று ஆய்வு செய்தால் வலுவான எதிர்க்கட்சிகள் இல்லை. எதிர்க்கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களை கவரவில்லை. மதுவிலக்குப் பிரச்சாரம் இம்மியளவும் யாரையும் பாதிக்கவில்லை. அதிமுகவின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் 100யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் கூடிய இலவச இண்டர்நெட் இணைப்பு வழங்கப்படும். பெண்கள் ஸ்கூட்டர் வாங்குவதற்கு 50சதம் மான்யம் போன்றவை உட்பட ஏகப்பட்ட அறிவிப்புகளை ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஏற்கனவே 2011 தேர்தல் அறிவிப்புகளில் கூறிய பலவற்றை நிறைவேற்றியதால் இந்த தேர்தல் அறிக்கையை மக்கள் நம்பினார்கள். வாக்களிக்கவும் செய்தார்கள். அதிமுக வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாகக் கொள்ளலாம். அதிமுகவின் ஓட்டு வங்கிகள் சிதறிப் போகவில்லை என்ற உண்மை இந்த தேர்தல் உணர்த்துகிறது. 

 

எது எப்படியோ நம் சமூகத்திற்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கிடைத்துவிட்டார். மதுரைதெற்குத் தொகுதியில் சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஸெளராஷ்ட்ரர்களும் தமிழ் மக்களைப் போலவே ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை இந்த வெற்றி மூலம் உறுதி செய்துள்ளார்கள். அவரது ஆட்சிக்காலத்தில் நம் சமூகத்திற்கு மருத்துவக் கல்லூரி அமையவேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் போன்ற துறைகளில் முன்னேற்றம் காணவும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஸெளராஷ்ட்ரர்களுக்கும் பிரதிநிதியான நமது இந்த சட்டமன்ற உறுப்பினர்தான் இந்த வேண்டுகோளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். 

 

மக்களால் நான். மக்களுக்காக நான் என்ற முதல்வரின் தாரக மந்திரத்தின்படி மொழிவாரி சிறுபான்மையினரான ஸெளராஷ்ட்ரர்களையும் தாயன்புடன் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றித் தரவேண்டும் என வேண்டிக்கொள்கிறோம். 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
1 + 8 =