Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
kuzhappam...Shreyangam

ஸ்ரேயங்க3ம்:

ஸ்ரேயங்க3ம்:
குழப்பம்….குழப்பமோ குழப்பம்!
தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. வேட்பாளர்கள் அறிவிப்பு ஓரிரு கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சியினரும் முடித்துக் கொண்டுள்ளனர். ஆளுங்கட்சியைப் பின்பற்றி சில வேட்பாளர்கள் மாற்றப்படலாம் என்று கருத்து தற்சமயம் பல கட்சிகளிடம் துளிர்விடத் தொடங்கியுள்ளது. 
எது எப்படி இருப்பினும் மதுரையில் தெற்குத்தொகுதி களத்தி;ல் ஸெளராஷ்ட்ரர்களுக்குத் தான் இடம் தர வேண்டும் என்று பிரதான திராவிடக்கட்சிகள் மனமுவந்து நம் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர். இது ஸெளராஷ்ட்ர மத்ய சபையினர் நடத்திய மகாநாட்டின் வெற்றி என்று ஒரு புறம் கூறினாலும் நம்;மிடையே குழப்பத்தை உருவாக்கி ஓட்டுக்களை சிதறவிடுவதில் திராவிடக் கட்சிகளை மிஞ்ச யாராலும் முடியாது என்பதை உறுதிப் படுத்துவது போல இன்றைய தேர்தல் களம் மாறிவருகிறது. 
இந்த சூழ்நிலையில் நமது நிலை என்ன? நாம் என்ன செய்யவேண்டும்? யாருக்கு வாக்களிக்க இருக்கிறோம். நம்முடைய கோரிக்கையாக நம் ஸெளராஷ்ட்ர வேட்பாளர் கிடைத்துவிட்டதாகக் கருதி மகிழவும் முடியாது. யாரையாவது ஒருவருக்கு குறிவைத்து வெற்றிப்பெறச் செய்யலாம் என்றால் மற்றவர்களின் பொல்லாப்பை எதிர்கொள்ள வேண்டிவரும். இதிலிருந்து விடுபட என்ன வழி? நம் சமூக ஓட்டுக்களை சிதறவிடாமல் அப்படியே ஒருவருக்கு வாக்களித்து அவரையே வெற்றிப் பெறச் செய்யலாம் என்றால் அந்த வேட்பாளர் எப்படி இருக்க வேண்டும்? 
சமூகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் செல்லக்கூடிய நபராகவும் அடிமட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பவராகவும் இருக்க வேண்டும். பெண்கள் முன்னேற்றம் ஒன்றைதான் இன்று அனைத்துக் கட்சிகளும் முன்னிலைப் படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நம் சமூகப் பெண்களின் தொழில் வளர்ச்சிää கல்விää சமூகப் பொருளாதார வளர்ச்சிää சமுதாய பொறுப்புணர்ச்சி போன்றவற்றை கருத்தில் கொண்டு யார் முனைப்புடன் செயல் படுவார்களோ அவர்களை நமது வேட்பாளர் என்று முன்னிலைப் படுத்தி வெற்றிப் பெறச் செய்தால் நமது வலிமை வரும் காலங்களில் அனைத்துக் கட்சிகளும் உணர்ந்து நமது பங்களிப்பின் அவசியத்தை புரிந்து கொள்ளவார்கள்.  

Vol.3 16th April 2016 Issue: 16

 


 

குழப்பம்….குழப்பமோ குழப்பம்!

தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. வேட்பாளர்கள் அறிவிப்பு ஓரிரு கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சியினரும் முடித்துக் கொண்டுள்ளனர். ஆளுங்கட்சியைப் பின்பற்றி சில வேட்பாளர்கள் மாற்றப்படலாம் என்று கருத்து தற்சமயம் பல கட்சிகளிடம் துளிர்விடத் தொடங்கியுள்ளது. 

எது எப்படி இருப்பினும் மதுரையில் தெற்குத்தொகுதி களத்தில் ஸெளராஷ்ட்ரர்களுக்குத் தான் இடம்தர வேண்டும் என்று பிரதான திராவிடக்கட்சிகள் மனமுவந்து நம் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர். இது ஸெளராஷ்ட்ர மத்ய சபையினர் நடத்திய மகாநாட்டின் வெற்றி என்று ஒரு புறம் கூறினாலும் நம்மிடையே குழப்பத்தை உருவாக்கி ஓட்டுக்களை சிதறவிடுவதில் திராவிடக் கட்சிகளை மிஞ்ச யாராலும் முடியாது என்பதை உறுதிப் படுத்துவது போல இன்றைய தேர்தல் களம் மாறிவருகிறது. 

இந்த சூழ்நிலையில் நமது நிலை என்ன? நாம் என்ன செய்யவேண்டும்? யாருக்கு வாக்களிக்க இருக்கிறோம். நம்முடைய கோரிக்கையாக நம் ஸெளராஷ்ட்ர வேட்பாளர் கிடைத்துவிட்டதாகக் கருதி மகிழவும் முடியாது. யாரையாவது ஒருவருக்கு குறிவைத்து வெற்றிப்பெறச் செய்யலாம் என்றால் மற்றவர்களின் பொல்லாப்பை எதிர்கொள்ள வேண்டிவரும். இதிலிருந்து விடுபட என்ன வழி? நம் சமூக ஓட்டுக்களை சிதறவிடாமல் அப்படியே ஒருவருக்கு வாக்களித்து அவரையே வெற்றிப் பெறச் செய்யலாம் என்றால் அந்த வேட்பாளர் எப்படி இருக்க வேண்டும்? 

சமூகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் செல்லக்கூடிய நபராகவும் அடிமட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பவராகவும் இருக்க வேண்டும். பெண்கள் முன்னேற்றம் ஒன்றைதான் இன்று அனைத்துக் கட்சிகளும் முன்னிலைப் படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நம் சமூகப் பெண்களின் தொழில் வளர்ச்சி, கல்வி, சமூகப் பொருளாதார வளர்ச்சி, சமுதாய பொறுப்புணர்ச்சி போன்றவற்றை கருத்தில் கொண்டு யார் முனைப்புடன் செயல் படுவார்களோ அவர்களை நமது வேட்பாளர் என்று முன்னிலைப் படுத்தி வெற்றிப் பெறச் செய்தால் நமது வலிமை வரும் காலங்களில் அனைத்துக் கட்சிகளும்  நமது பங்களிப்பின் அவசியத்தை உணர்ந்து புரிந்து கொள்வார்கள்.  


 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
1 + 9 =