Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
gOthru charithru...8

 

கோ3த்ரு சரித்ரு கே4ரு நாவுந்
தொகுத்தளிப்பவர்
சூர்யாஞானேஸ்வர்
10. வஸிஷ்ட மகரிஷி கோ3த்ரம்
பிரம்மதேவின் மானஸ புத்திரர்களில் ஒருவர் வஸிஷ்டர். இவர் வைஸ்வத மன்வந்திரத்தில் ஸப்த ரிஷிகளில் ஒருவர். வைஸ்வத மன்வந்திரம் என்பதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என ஆய்வு செய்ய முற்பட்டால் அதன் விளக்கம் நீண்டுச் செல்கிறது. அதனை அடுத்து வரும் கட்டுரைகளி;ல் விளக்கம் தருகிறேன். ஒரு சிறு விளக்கம் - தற்போதைய பிரபஞ்ச சுழற்சி வைஸ்வத மனுவால் ஆளப்படுகிறது. பிரம்மாவின் ஆயட்காலத்தில் 504ää000 மனுக்கள் இருப்பர். இதற்கு வைஸ்வத மனுவந்தரம் என்று பெயர். 
தலைசிறந்த தவசீலரான இவர் சூரிய வம்சத்தின் அரசர்களுக்கு ராஜகுரு. அயோத்தியை ஆண்ட தசரத சக்கரவர்த்திக்கும் இவரே ராஜகுரு. ர்pக்வேதத்தின் 7வது காண்டத்தை அருளியவர் இவர் என்பதால் இவரை வேதகால மகரிஷி என்றும் சொல்வதுண்டு. 
சனிக்கிரகத்திற்கு அப்பால் பதினோரு லட்சம் யோசனை தூரம் உள்ள ஏழு ரிஷிகளின் நட்சத்திர மண்டலமே ஸப்தரிஷி மண்டலம் ஆகும். வானம் நிர்மலமாக இருக்கும் இரவு நேரத்தில் வானத்தின் வடக்கே இந்த ஸப்தரிஷி மண்டலம் தெரியும். ஸப்தரிஷிகள் என்று சொல்லப் படுவோர் அத்திரிää வசிஷ்டர்ää காஸ்யபர்ää கௌதமர்ää பரத்வாஜர்ää விஸ்வாமித்திரர்ää ஜமதக்னி ஆகியோர். இந்த ஏழு நட்சத்திரங்களைத் தாண்டி வடக்கில் பிரகாசிக்கும் நட்சத்திரம்தான் துருவ நட்சத்திரம். 
பண்டைக் காலத்தில் கடலில் மரக்கலம் செலுத்திய மாலுமிகள் துருவ நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் மற்ற திசைகளை நிர்ணயித்தனர். துருவ நட்சத்திரத்திற்கு நேர் எதிர் திசை தெற்கு. சூரியன் உதிக்கும் திசை கிழக்கு. அது அஸ்தமிக்கும் திசை மேற்கு. இவ்வாறு திசைகளை அறிந்து மரக்கலம் செலுத்தியதாக வரலாறு கூறுகிறது.              
வசிஷ்ட மகரிஷிக்கும் விஸ்வாமித்திர மகரிஷிக்கும் இடையே நடந்தப் போட்டியால் உலகத்திற்கு நன்மைகள் பல விளைந்தது. 
ஒரு சமயம் இந்திர சபையில் பூவுலகில் தர்மத்தின்  வழி வாழ்பவரும் அரசாட்சி புரிபவரும் உண்மையை மட்டுமே பேசுகின்ற அரசர் யார்? என இந்திரன் கேட்கிறார். அதுசமயம் வசிஷ்டர் தனது சீடனான திரிசங்குவின் மகனும் சூரிய வம்சத்தின் அரசனுமான அரிச்சந்திரன் தான் என்று கூறுகிறார். அங்கு வீற்றிருந்த விஸ்வாமித்திரர் வசிஷ்டரின் வாக்கைப் பொய்யாக்க உறுதிக்கொண்டு பல சோதனைகளை அரிச்சந்திரனுக்கு விளைவித்தது யாவரும் அறிந்ததே. 
இந்த வசிஷ்ட மகரிஷியின் சிஷ்ய-பிரசிஷ்ய வழித்தோன்றல்கள்தான் வசிஷ்ட கோத்திரத்தினர். வசிஷ்ட கோத்திர சுலோகம்:
ப்3ரஹ்மாதி தே3வஸ்ச பு4ஜங்க3 யோனி:
ஸ்த்ரீ பஞ்சதாரா ந்ருக3ணம்ச க்ருஷ்ண: 
ஜம்பூ4தரு: பிங்க3ள பகஷிகம்ச
வஸிஷ்ட2 ஸாண்டி3ல்ய ச கௌ3தமாநாம் 
வஸிஷ்ட கோ3த்ரம்:
வேத்3 : யஜுர் வேத்3
ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு
நட்சத்ரு : ரோஹிணி
கோ3த்ரு : வஸிஷ்ட2 கோத்ரம்
தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்
கா3ம் : ஸோமநாதபுரி
தே3வதொ : பி3ரஹ்மா
க3ணம் : மனுஷ்ய க3ணம்
வாஹநொ : ஆதிஸேஷன்
பட்சி : குடுல்குப்பொ (கு3ட்லகூ3ப) ஆந்தை
விருட்சம் : ஜெம்பு3 ஜா2ட் (நாவல்மரம்)
வாந் : மேளுவான்
ஆரிஷம் : திரியாரிஷம்
பிரவரம் : வஸிஷ்ட2ää பிரமத3ää ப4ரத்வாஜ ஆகிய கோத்திரங்கள்
                     திரியாரிஷ ப்ரவரம்.
வஸிஷ்ட மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:
1. குப்பியா
இந்த கோத்திரத்தின் வீட்டுப்பெயர்கள் இந்த ஒன்றைத்தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. நம் ஸெளராஷ்ட்ரர்கள் வாழுகின்ற எந்த ஊரிலிருந்தாலும் இந்த கோத்திரத்தைச் சேர்ந்த வீட்டுப்பெயர் உள்ளவர்கள் எங்களுக்குத் தெரிவித்தால் இணைத்துக்கொள்ளலாம். 

கோ3த்ரு சரித்ரு கே4ரு நாவுந்

தொகுத்தளிப்பவர்

சூர்யாஞானேஸ்வர்

10. வஸிஷ்ட மகரிஷி கோ3த்ரம்

பிரம்மதேவின் மானஸ புத்திரர்களில் ஒருவர் வஸிஷ்டர். இவர் வைஸ்வத மன்வந்திரத்தில் ஸப்த ரிஷிகளில் ஒருவர். வைஸ்வத மன்வந்திரம் என்பதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என ஆய்வு செய்ய முற்பட்டால் அதன் விளக்கம் நீண்டுச் செல்கிறது. அதனை அடுத்து வரும் கட்டுரைகளி;ல் விளக்கம் தருகிறேன். ஒரு சிறு விளக்கம் - தற்போதைய பிரபஞ்ச சுழற்சி வைஸ்வத மனுவால் ஆளப்படுகிறது. பிரம்மாவின் ஆயட்காலத்தில் 504ää000 மனுக்கள் இருப்பர். இதற்கு வைஸ்வத மனுவந்தரம் என்று பெயர். 

தலைசிறந்த தவசீலரான இவர் சூரிய வம்சத்தின் அரசர்களுக்கு ராஜகுரு. அயோத்தியை ஆண்ட தசரத சக்கரவர்த்திக்கும் இவரே ராஜகுரு. ரிக்வேதத்தின் 7வது காண்டத்தை அருளியவர் இவர் என்பதால் இவரை வேதகால மகரிஷி என்றும் சொல்வதுண்டு. 

சனிக்கிரகத்திற்கு அப்பால் பதினோரு லட்சம் யோசனை தூரம் உள்ள ஏழு ரிஷிகளின் நட்சத்திர மண்டலமே ஸப்தரிஷி மண்டலம் ஆகும். வானம் நிர்மலமாக இருக்கும் இரவு நேரத்தில் வானத்தின் வடக்கே இந்த ஸப்தரிஷி மண்டலம் தெரியும். ஸப்தரிஷிகள் என்று சொல்லப் படுவோர் அத்திரி, வசிஷ்டர், காஸ்யபர், கௌதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகியோர். இந்த ஏழு நட்சத்திரங்களைத் தாண்டி வடக்கில் பிரகாசிக்கும் நட்சத்திரம்தான் துருவ நட்சத்திரம். 

பண்டைக் காலத்தில் கடலில் மரக்கலம் செலுத்திய மாலுமிகள் துருவ நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் மற்ற திசைகளை நிர்ணயித்தனர். துருவ நட்சத்திரத்திற்கு நேர் எதிர் திசை தெற்கு. சூரியன் உதிக்கும் திசை கிழக்கு. அது அஸ்தமிக்கும் திசை மேற்கு. இவ்வாறு திசைகளை அறிந்து மரக்கலம் செலுத்தியதாக வரலாறு கூறுகிறது.              

வசிஷ்ட மகரிஷிக்கும் விஸ்வாமித்திர மகரிஷிக்கும் இடையே நடந்தப் போட்டியால் உலகத்திற்கு நன்மைகள் பல விளைந்தது. 

ஒரு சமயம் இந்திர சபையில் பூவுலகில் தர்மத்தின்  வழி வாழ்பவரும் அரசாட்சி புரிபவரும் உண்மையை மட்டுமே பேசுகின்ற அரசர் யார்? என இந்திரன் கேட்கிறார். அதுசமயம் வசிஷ்டர் தனது சீடனான திரிசங்குவின் மகனும் சூரிய வம்சத்தின் அரசனுமான அரிச்சந்திரன் தான் என்று கூறுகிறார். அங்கு வீற்றிருந்த விஸ்வாமித்திரர் வசிஷ்டரின் வாக்கைப் பொய்யாக்க உறுதிக்கொண்டு பல சோதனைகளை அரிச்சந்திரனுக்கு விளைவித்தது யாவரும் அறிந்ததே. 

இந்த வசிஷ்ட மகரிஷியின் சிஷ்ய-பிரசிஷ்ய வழித்தோன்றல்கள்தான் வசிஷ்ட கோத்திரத்தினர். வசிஷ்ட கோத்திர சுலோகம்:

ப்3ரஹ்மாதி தே3வஸ்ச பு4ஜங்க3 யோனி:

ஸ்த்ரீ பஞ்சதாரா ந்ருக3ணம்ச க்ருஷ்ண: 

ஜம்பூ4தரு: பிங்க3ள பகஷிகம்ச

வஸிஷ்ட2 ஸாண்டி3ல்ய ச கௌ3தமாநாம் 

வஸிஷ்ட கோ3த்ரம்:

வேத்3 : யஜுர் வேத்3

ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு

நட்சத்ரு : ரோஹிணி

கோ3த்ரு : வஸிஷ்ட2 கோத்ரம்

தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்

கா3ம் : ஸோமநாதபுரி

தே3வதொ : பி3ரஹ்மா

க3ணம் : மனுஷ்ய க3ணம்

வாஹநொ : ஆதிஸேஷன்

பட்சி : குடுல்குப்பொ (கு3ட்லகூ3ப) ஆந்தை

விருட்சம் : ஜெம்பு3 ஜா2ட் (நாவல்மரம்)

வாந் : மேளுவான்

ஆரிஷம் : திரியாரிஷம்

பிரவரம் : வஸிஷ்ட2, பிரமத3, ப4ரத்வாஜ ஆகிய கோத்திரங்கள்

                    திரியாரிஷ ப்ரவரம்.

வஸிஷ்ட மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:

1. குப்பியா

இந்த கோத்திரத்தின் வீட்டுப்பெயர்கள் இந்த ஒன்றைத்தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. நம் ஸெளராஷ்ட்ரர்கள் வாழுகின்ற எந்த ஊரிலிருந்தாலும் இந்த கோத்திரத்தைச் சேர்ந்த வீட்டுப்பெயர் உள்ளவர்கள் எங்களுக்குத் தெரிவித்தால் இணைத்துக்கொள்ளலாம். 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 5 =