Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
mudakkaththaan...

 

முடக்கத்தான் தோசை:
தேவையானவை: முடக்கத்தான் கீரை 1கட்டு – தோசை மாவு 1 கப்பு
செய்முறை: முதலில் முடக்கத்தான் கீரையை எடுத்து தண்ணீரை விட்டு சுத்தப்படுத்திக் கொண்டு ஒரு கை நிறைய அள்ளி மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதை அப்படியே எடுத்து தோசை மாவில் போட்டு நன்றாக கலக்கவும். நன்கு கலந்தப்பின் சட்டி காய்ந்தவுடன் தோசை ஊற்றி பக்குவமாக எடுக்கவும். சூடான தோசையுடன் ஏதாவது ஒரு சட்னியோ சாம்பாரோ இருந்தால் போதும். சாப்பிட சுவையாக இருக்கும். அத்தோடு உடம்பிற்கும் சுகமாக இருக்கும். 
அதாவது முழங்கால் - மூட்டுவலி போன்ற உபாதைகளை குணப்படுத்தும் அரிய மருத்துவகுணம் கொண்டது இந்த முடக்கத்தான் கீரை. சாதாரணமாக எல்லாவகை கீரை விற்பவர்களிடம் கிடைக்கும். அத்தோடு இதன் சூப் சாப்பிட சுவையாக இருக்கும். எனவே இந்த கீரையின் சூப்பையும் செய்து சாப்பிட வயதானவர்கள் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் உட்பட குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். சூப்பை எப்படி தயார் செய்வது என்பது பற்றி கீழே தந்துள்ள குறிப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
முடக்கத்தான் கீரை சூப்:
தேவையானவை: 100 கிராம் வெங்காயம்ää 2 தக்காளிää சிறிதளவு சோளமாவுää அரைத் தேக்கரண்டி மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு.
செய்முறை: முதலில் முடக்கத்தான் கீரையை தனியாக எடுத்து தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு சட்டியை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்தவுடன் அறுத்து வைத்த வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் அதில் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். ஒரு கரண்டி சோளமாவையும் சேர்த்து நன்கு கலக்கிய பின்னர் முடக்கத்தான் கீரையை போட்டு வதக்கி கொள்ளவும். கெட்டியான பக்குவத்திற்கு வந்தவுடன் அரை லிட்டர் தண்ணீரைச் சேர்த்து கலக்கவும். தேவையான அளவு உப்பைச் சேர்த்து அப்படியே குக்கரில் விட்டு மூன்று விசில் வரை வைக்கவும். பத்து நிமிடம் கழித்து திறந்துப்பார்த்தால் சுவையான சூப் ரெடி! சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட சுவை அதிகமாக இருக்கும். 
ருசித்து ரசித்தவர்: சூரியாஞானேஸ்வர்

முடக்கத்தான் தோசை

 

தேவையானவை: முடக்கத்தான் கீரை 1கட்டு – தோசை மாவு 1 கப்பு


செய்முறை: முதலில் முடக்கத்தான் கீரையை எடுத்து தண்ணீரை விட்டு சுத்தப்படுத்திக் கொண்டு ஒரு கை நிறைய அள்ளி மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதை அப்படியே எடுத்து தோசை மாவில் போட்டு நன்றாக கலக்கவும். நன்கு கலந்தப்பின் சட்டி காய்ந்தவுடன் தோசை ஊற்றி பக்குவமாக எடுக்கவும். சூடான தோசையுடன் ஏதாவது ஒரு சட்னியோ சாம்பாரோ இருந்தால் போதும். சாப்பிட சுவையாக இருக்கும். அத்தோடு உடம்பிற்கும் சுகமாக இருக்கும். 


அதாவது முழங்கால் - மூட்டுவலி போன்ற உபாதைகளை குணப்படுத்தும் அரிய மருத்துவகுணம் கொண்டது இந்த முடக்கத்தான் கீரை. சாதாரணமாக எல்லாவகை கீரை விற்பவர்களிடம் கிடைக்கும். அத்தோடு இதன் சூப் சாப்பிட சுவையாக இருக்கும். எனவே இந்த கீரையின் சூப்பையும் செய்து சாப்பிட வயதானவர்கள் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் உட்பட குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். சூப்பை எப்படி தயார் செய்வது என்பது பற்றி கீழே தந்துள்ள குறிப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


முடக்கத்தான் கீரை சூப்


தேவையானவை: 100 கிராம் வெங்காயம், 2 தக்காளி, சிறிதளவு சோளமாவு, அரைத் தேக்கரண்டி மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு.


செய்முறை: முதலில் முடக்கத்தான் கீரையை தனியாக எடுத்து தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு சட்டியை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்தவுடன் அறுத்து வைத்த வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் அதில் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். ஒரு கரண்டி சோளமாவையும் சேர்த்து நன்கு கலக்கிய பின்னர் முடக்கத்தான் கீரையை போட்டு வதக்கி கொள்ளவும். கெட்டியான பக்குவத்திற்கு வந்தவுடன் அரை லிட்டர் தண்ணீரைச் சேர்த்து கலக்கவும். தேவையான அளவு உப்பைச் சேர்த்து அப்படியே குக்கரில் விட்டு மூன்று விசில் வரை வைக்கவும். பத்து நிமிடம் கழித்து திறந்துப்பார்த்தால் சுவையான சூப் ரெடி! சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட சுவை அதிகமாக இருக்கும். 

ருசித்து ரசித்தவர்: சூரியாஞானேஸ்வர்

 

User Comments
Kuppa Rengarajan, Woraiyur
Congratulation good work in publication about sourashtra community
Information
Name
Comments
 
Verification Code
1 + 7 =